Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான் இசையமைப்பாளரானதிற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்- எஸ்.ஜே.சூர்யா
நான் இசையமைப்பாளரானதற்குக் காரணமே ஏ ஆர் ரஹ்மான்தான் என்றார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா.
எஸ்.ஜே. சூர்யா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து, படத்தை இயக்கி நடித்துள்ள ‘இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் விஜய், தனுஷ், முருகதாஸ், சத்யராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
எஸ் ஜே சூர்யா
இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, "வாலி', 'குஷி' ஆகிய படங்களில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். 'இசை'யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேடவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன்.
சாவித்ரி
பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. இவர் நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார். சமகால சாவித்ரி போல தோன்றினார். நிச்சயம் அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.
ரூ 100 கோடி விஜய்
இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்துள்ள விஜய் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், பழக்கமில்லை என்றாலும் விழாவுக்கு கூப்பிட்டதும் தயக்கமில்லாமல் எப்போ என்றார் தனுஷ். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
சத்யராஜ்
சத்யராஜ் இல்லை என்றால் இந்தப்படம் முழுப்படமாக வந்திருக்காது. ரஜினி, சத்யராஜ், ஷாருக்கான் ஆகியோரிடம் உள்ளுக்குள் இருக்கும் தனித்துவம் வரும். இதிலும் வந்துள்ளது.
ரஹ்மான் தந்த ஊக்கம்
'இசை' படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் 'ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?' என்று ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் இசையமைப்பளராக அவர்தான் காரணம்," என்றார்.