Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இணையதள விமர்சகரை மிரட்டினாரா ஆஸ்கார் ரவிச்சந்திரன்?
அர்னால்டை வரவழைத்து அவமரியாதை செய்துவிட்டார்கள் என ஐ படக்குழு மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.
இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் டீஸரை யாரோ திருடி யு ட்யூபில் வெளியிட்டுவிட்டதாகக் கூறி, அலப்பறை பண்ணிக்கொண்டிருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
இது தொடர்பாக தன்னை அலுவலகத்துக்கு அனுப்பி மிரட்டியதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் மீது குற்றம்சாட்டியுள்ளார் இணையதள விமர்சகர் பிரசாந்த் என்பவர்.
டீசர் பார்த்தோம்
இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், "விக்ரமோட ரசிகர்கள் சிலருக்கு 'ஐ' படத்தின் டீஸரை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அந்த ரசிகர்களுடன் நானும் சில மீடியாக்காரர்களும் பார்த்தோம். இந்த டீசர் குறித்து ரவிச்சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்தோம்.
அழைப்பு
நான்கு நாள் கழித்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள். அங்கே ரவிச்சந்திரனோட தம்பி ரமேஷ் உள்பட பலர் இருந்தாங்க. 'கடைசியா நீங்க நாலு பேர்தான் டீஸரைப் பார்த்தீங்க. உங்கள்ல யாரோ ஒருத்தர்தான் வெளியிட்டிருக்காங்க. யாருனு சொல் லுங்க?' எங்க மேல பழியைப் போட்டார்கள்.
மிரட்டல்
ஒரு கட்டத்தில் என்னை கடுமையா மிரட்டினார். நான் சொன்ன எந்த விளக்கத்தையும் அவர் கேட்கவே இல்லை. நியாயமாக இவர் போயிருக்க வேண்டிய இடம் போலீஸ் ஸ்டேஷன்தான். அங்கே போயிருந்தால் உண்மை தெரிந்திருக்கும்.
ஆறு மாசமா இதே வேல..
இன்று நேற்றல்ல.. கடந்த ஆறு மாதங்களாகவே அவர் அலுவலகத்துக்கு வருகிற எல்லோரிடமும் இந்த டீசரைப் போட்டுக் காட்டிக்கிடிருக்கார். திடீர்னு என் மேல குறை சொல்றார்.
பப்ளிசிட்டிக்காக..
இதெல்லாம் தெரியாம, நானும் ரவிச்சந்திரனும் சேர்ந்து பேசி வச்சிக்கிட்டு பப்ளிசிட்டிக்காக ஸ்டன்ட் அடிக்கிறதா சமூக வலைத் தளங்கள்ல செய்தி வருது. அதுக்காகத்தான் நடந்தது என்னன்னு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறேன்," என்றார்.
ஆபீஸ் பூட்டை உடைத்து
ஆனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனோ, இந்த பிரசாந்த் யார் என்றே தெரியாது என்கிறார், எல்லா பிரபலங்களும் வழக்கமாகச் சொல்வது போல!
தனது அலுவலக பூட்டை உடைத்து யாரோ டீசரை திருடி வெளியிட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!