Don't Miss!
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் ‘அச்சம் என்பது மடமையடா’!
சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு அச்சம் என்பது மடமையடா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
மின்னலே, வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கௌதம்மேனன்.
பொதுவாக தனது படத்திற்கு பிரபல பாடல் வரிகளைத் தலைப்பக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கௌதம்.
என்னை அறிந்தால்...
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தலைப்புக் கூட, எம்ஜிஆரின் உன்னை அறிந்தால் பாடலின் சாயலில் வைக்கப்பட்டது தான்.
சிம்புவை வைத்து
இந்நிலையில், என்னை அறிந்தால் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த பட வேலைகளைத் துவக்கி விட்டார் கௌதம். இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.
சட்டென்று மாறுது வானிலை...
ஏற்கனவே சிம்புவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்தைத் தந்த கௌதம், இப்படத்திற்கு முதலில் ‘சட்டென்று மாறுது வானிலை' எனப் பெயர் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.
சூர்யா பட பாடல் வரியில்...
இந்தத் தலைப்பு வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா பாடும் பாடலின் ஒரு வரி ஆகும்.
வேறு தலைப்பு...
ஆனால் அதனை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்திருந்ததால், அந்த தலைப்பை கைவிட்டார் கௌதம். எனவே வேறு பெயரை பரிசீலனை செய்து வந்தார்.
அச்சம் என்பது மடமையடா....
இந்நிலையில், தற்போது ‘அச்சம் என்பது மடமையடா' என சிம்பு படத்தின் பெயரை உறுதி செய்திருக்கிறார் கௌதம். இதுவும் எம்ஜிஆர் பாடல் வரிதான்.
கதைக்கு தகுந்த தலைப்பு...
கதைக்கு தகுந்தபடி இருப்பதால், இத்தலைப்பை தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார் கௌதம். இப்படம் காதல் கலந்த ஆக்ஷன் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை ஏ.ஆர்.ரஹ்மான்...
இம்மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு ஜோடியாக பல்லவி நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.