Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அமராவதி ஆற்றுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசும் 'அச்சமில்லை அச்சமில்லை'!
தன் உதவி இயக்குநர் முத்துகோபால் இயக்கியுள்ள படத்தை வாங்கி தன் சொந்த பேனரில் வெளியிடுகிறார் இயக்குநர் அமீர்.
முத்து கோபால், இயக்குநர் அமீரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவர். தற்போது இவர் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோகவும் நடித்துள்ளார்.
ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
திருப்பூரில் உள்ள சாயப் பட்டறை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலந்து அதன் மூலம் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகள், திருப்பூர், பொள்ளாச்சி, பகுதி மக்கள் எந்த அளவிற்கு சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கதை.
படத்தை சொந்தமாக தயாரித்த முத்து கோபாலுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படவே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தனது குரு அமீரிடம் வந்துள்ளார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த படத்தைப் பார்த்த அமீர், படத்தின் நேர்த்தி, கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தானே வாங்கிக் கொண்டார்.
படத்திற்கு முத்து கோபால் வைத்திருந்த பெயரை மாற்றி 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற தலைப்பைச் சூட்டியுள்ளார்.
"இந்த மாதிரி சமூக பிரச்சினைகளை பேசும் படங்களிைத்தான் இனி நடிப்பது, தயாரிப்பது, இயக்குவது என முடிவு செய்துள்ளேன். முத்து கோபாலின் படத்தைப் பார்த்ததும் அதன் சமூக நோக்கம் பிடித்த்திருந்தது. அதனால் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்," என்ற அமீர், இந்தப் படத்தில் ஒரு கெளரவ வேடத்தில் தோன்றுகிறார்.
அச்சமில்லை அச்சமில்லை 1984-ல் கே பாலச்சந்தர் இயக்கிய படம். தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெற்ற முக்கியமான அரசியல் படம். பாலச்சந்தர் குடும்பத்தினரின் அனுமதியுடன் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் அமீர்.
இந்தப் படத்தை படமாக்கும்போது, ஏகப்பட்ட மிரட்டல்கள், தொந்திரவுகள் வந்தனவாம் படக்குழுவினருக்கு. ஆனால் அஞ்சாமல் மனதில் நினைத்ததைப் படமாக்கியுள்ளாராம் இயக்குநர் முத்துகோபால்.
-
Pandian stores 2 serial: சாமியாராக மாறிய சரவணன்.. மயங்கி விழுந்த கோமதி.. இது என்ன வம்பா போச்சு!
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை
-
பல சர்ச்சைகளுக்கு இடைய நடந்த டப்பிங் யூனியன் தேர்தல்.. மீண்டும் தலைவரான ராதா ரவி!