Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது!
சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டியதற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழில் பிரபல நடிகராக உள்ளார். குறிப்பாக நடிகர் அஜீத்துடன் இணைந்து இவர் நடித்த என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு கவனிக்கத்தக்க நாயகனாகிவிட்டார்.
இப்போது அவர் நடித்த வா டீல், குற்றம் 13 போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, அருண் விஜய் தனது ஆடி காரை அதிவேகமாக ஓட்டி வந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண் விஜய் எவ்வித காயங்கள் இன்றி தப்பினார்.
ஆனால் போலீஸ் வாகனம்சேதமடைந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி தலை கொள்ளாத போதையில் காரை ஓட்டி வந்துது தெரியவந்தது.
உடனே அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அருண் விஜய்யின் தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். வழக்குப் பதிவுக்குப் பின்னர் சிறிது நேரம் காவல் நிலையத்தில் இருந்த அருண் விஜய் பின்னர் தந்தையுடன் வீடு திரும்பினார்.