Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறேன்.. எமன் கால்ஷீட் வேண்டாம்.. நடிகர் "தாடி" பாலாஜி!
சென்னை: ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிக்க கால்ஷீட் கொடுக்க காத்திருக்கிறேன். இந்த நிலையில் எமனுக்கு நான் கால்ஷீட் கொடுப்பேனா என்று நடிகர் பாலாஜி கூறியுள்ளார்.
சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் லட்சுமி, துளசி, பயணம், உறவுகள், செல்வி என பல சீரியல்களை இயக்கியவர். சமீப காலமாக அவருக்கு இயக்கும் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வருமானம் இல்லை, கடன் தொல்லையும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலாஜி தற்கொலை என்ற செய்தியை சிலர் நடிகர் பாலாஜி தற்கொலை என்று பரப்பி விட்டு விட்டனர். இவரும் சின்னத்திரை நடிகர்தான். சினிமாவிலும் நடித்துள்ளார். டிவி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். தாடி பாலாஜி என்று நட்பு வட்டாரம் செல்லமாகவும் அழைக்கும்.
இயக்குநர் பாலாஜி மறைவை பலர் தாடி பாலாஜி மறைவு என்று செய்தி பரப்பி படத்துடன் சமூக வலைதளங்களில் செய்தியும் பரப்பி இரங்கலும் போட்டு விட்டனர்.
இதுகுறித்து நடிகர் பாலாஜி கூறுகையில், என் உடல் நிலை பற்றி வதந்திகள் பரவி உள்ளன. தேசிய விருது, ஆஸ்கர் விருது, தமிழக அரசு உள்ளிட்ட பல விருதுகளை பெறவும், அதே மாதிரி கமல், ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்கவும் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, எமன் எனக்கு கால்சீட் கொடுத்து விடுவானா. கொடுக்கவே மாட்டான்.
உங்கள் ஆசிர்வாதத்தால் நல்லாவே இருப்பேன். இன்று என் உடல் நிலை பற்றி இப்படி ஒரு விஷயம் பரவி இருக்கிறது. பங்குனி உத்திரத்தில் எப்போதுமே இதுமாதிரி வதந்தி வந்தால் நூறு ஆயுசு என்று சொல்வார்கள், நன்றி என்று கூறியுள்ளார் பாலாஜி.