Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மிரட்டல்... நடிகர் ஜீவா குற்றச்சாட்டு!
ரஜினிக்கு ஆதரவாகப் பேசியதற்காக சீமான் கட்சியினர் மிரட்டுகிறார்கள்! - நடிகர் ஜீவா குற்றச்சாட்டு
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு வரும் பணத்திற்கு கணக்கு காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பியதால், சீமானின் தொண்டர்கள் மிரட்டல் கொடுத்து வருவதாக நடிகர் ஜீவா குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ,கபாலி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று ரஜினி தெரிவிப்பாரா என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, நாம் தமிழர் கட்சிக்கு வரும் பணத்திற்கு சீமான் கணக்கு காட்டுவாரா என்று கேட்டிருந்தார்
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் ஜீவாவுக்கு தொலைபேசியில் அழைத்து ஆபாசமாகவும், மிரட்டல் கொடுத்தும் பேசுகிறார்களாம்.
இந்த மிரட்டல் தொடர்பாக சீமானுக்கு, ஜீவா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு... சில தினங்களுக்கு முன்பு கபாலி படத்தின் சம்பளத்தை கணக்கு காட்ட ரஜினிகாந்த் அவர்களால் முடியுமா என்று நீங்கள் கேட்டதற்கு, உங்கள் கட்சிக்கு வரும் பணத்திற்கு உங்களால் கணக்கு காட்டமுடியுமா என்று ஒரு ரசிகனாக தலைவர் திரு.ரஜினிகாந்த அவர்களின் ஆதரவாளராக நான் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்
அது முதல் உங்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள் அதில் சிலர் தவறாகவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் பேசுவது வருத்தமளிக்கிறது.
இது தமிழர் பண்பாடும் அல்ல... ஆகையால் உங்களின் சில தம்பிகளுக்கு நீங்கள் விமர்சனங்களை பொது மேடையில் விவாதிப்பது மட்டுமே அரசியல் நாகரீகம் என்பதை சொல்லுங்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன் .. நன்றி. ஜீவா..." என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலும் வெளிநாட்டில் வசிக்கும் சீமானின் ஆதரவாளர்கள்தான் இதுபோல மிரட்டி வருவதாக ஜீவா தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து இன்னும் காவல் துறையினரிடம் ஜீவா புகார் எதுவும் அளிக்கவில்லை என தெரிகிறது. சமீபத்தில் தான் ரஜினியை, தமிழருவி மணியனுடன் சென்று சந்தித்து வந்தார் ஜீவா என்பது குறிப்பிடத் தக்கது.