Don't Miss!
- News குரங்கு சேட்டை பண்ண முடியாது..பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த கோர்ட்..! பஸ்களில் இனி தானியங்கி கதவு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்தார் கார்த்தி!
சென்னை: மெரீனாவில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று தன்னையும் இணைத்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேரெழுச்சியுடன் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு சென்று போரட்டத்தில் கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியும் இன்று காலை நேரில் சென்று போரட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கார்த்தியின் தந்தை சிவகுமார் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பீட்டா அமைப்பையும் விளாசினார்.
கார்த்தியின் அண்ணன் சூர்யா ஒரு படி மேலே சென்று, பீட்டாவுக்கு எதிராக வழக்கே தொடர்ந்துள்ளார்.