Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர்.
டிசம்பர் மாதம் பிறந்ததும் பிறந்தது முதல் தேதியிலேயே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் கனெக்டிவிட்டி இல்லாததால் அங்கு சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.
#ChennaiRains Tamil actor #RajKiran rescued by security personnel #ITVideo
Click on 'Watch Now' for more
https://t.co/tf3ay4LlBN
— India Today (@IndiaToday) December 3, 2015
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய மூத்த நடிகை லட்சுமியும் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷத்தின் வீட்டில் 11 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்ததால் அவர் அகதி போன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.