Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
உயிருக்கு போராடும் ரசிகை... நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்!
சென்னை : சென்னையில் கடும் நோய் பாதிப்பில் சிக்கிப் போராடிவரும் ரசிகை ஒருவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்த அர்ச்சனா (25), பல லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் கடும் நோய் பாதிப்புக்கு ஆளாகி போராடி வருகிறார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. டாக்டர்கள் கை விரித்து விட்ட நிலையில், பேச முடியாமல், நடக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் அர்ச்சனா.
இந்நிலையில், தீவிர விஜய் ரசிகையான அர்ச்சனா, அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அர்ச்சனாவின் பெற்றோர்.
அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்தித்தார் விஜய். கைகளை பற்றிக் கொண்டு அன்பாக பேசி மகிழ்ந்தார். அர்ச்சனாவின் உடல்நிலை பற்றியும் அவர் கேட்டு அறிந்தார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் அர்ச்சனா மிகவும் சந்தோஷமானார். முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. பின்னர் பெற்றோரிடம் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு விஜய் விடை பெற்று சென்றார்.