Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சபர்ணா போன்றே நிர்வாண நிலையில் மற்றொரு நடிகையின் உடல் கண்டுபிடிப்பு: என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் நடிகை சபர்ணா இறந்து கிடந்தது போன்றே மீண்டும் ஒரு நடிகை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் துணை நடிகை ஜெயஸ்ரீ(49). சென்னை சாலிகிராமம் பெரியார் தெருவில் வசித்து வந்தார். திருமணமாகாத அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை
ஜெயஸ்ரீ நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளை காணவில்லை என அவரின் சகோதரர் செல்வராஜ் கூறியுள்ளார்.
மரணம்
ஜெயஸ்ரீ படுக்கையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அந்த அறையில் ஆணுறை ஒன்று கிடந்துள்ளது. இதுவும் போலீசாருக்கு புதிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
சபர்ணா
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணாவும் சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாண நிலையில் தான் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன காரணம்?
சபர்ணாவின் மரணத்திற்கான காரணமே இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு நடிகை அதே போன்று மர்மமான முறையில் இறந்துள்ளார்.