Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னை மழை: வெள்ள நிவாரணப் பணிகளில்... மகளுடன் இணைந்து களமிறங்கிய குஷ்பூ
சென்னை: நடிகை குஷ்பூ சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது மகளுடன் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் கடலூர் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உலகைச் சேர்ந்த நடிக, நடிகையர் நிவாரணப் பொருட்களை சேகரித்து வழங்கி வருகின்றனர்.
மேலும் தங்களால் இயன்ற தொகைகளையும் தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண உதவிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ மழையில் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு நேரடியாக சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
Visited chengelpet n kancheepuram today..distributed bedsheets,sarees n rice. .so painful 2 c them in pain.. pic.twitter.com/BBI5qUYeLf
— khushbusundar (@khushsundar) December 4, 2015
மக்களுக்குத் தேவையான உணவு, போர்வை ஆகியவைகளை தனது இளைய மகள் அவந்திகாவுடன் (13) இணைந்து வழங்கி வருகிறார்.
"எனது இளைய மகள் என்னுடன் இணைந்து வெள்ள நிவாரணப் பணிகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார்" என்று குஷ்பூ இது குறித்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை தனது பணத்தில் இருந்து நிறைவேற்ற இருப்பதாகவும் குஷ்பூ கூறியிருக்கிறார்.