Don't Miss!
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம்
சென்னை: மூத்த நடிகையும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவருமான நடிகை மனோரமா நேற்று இரவு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
மனோரமாவின் மறைவு தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, அவரின் மறைவு செய்தி அறிந்த நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
மனோரமாவின் மறைவு குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களின் பகிர்வுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.
|
தமிழ்போல எந்நாளும்
"நடிப்புக்கு இலக்கணம் கற்பித்த தமிழச்சியே, தமிழ் போல் எந்நாளும் மங்காது உன் புகழ் நிலைத்திருக்கும்" என்று ரசிகர் பவித்ரன் கூறியிருக்கிறார்.
|
ஒரே நாளில்
"பல நாட்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மனோரமா ஒரே நாளில் அனைவரையும் அழ வைத்து சென்றுவிட்டார்" என்று கூறியிருக்கிறார் மங்காத்தா.
|
இந்தியன் படம்
"இந்தியன் படத்தில் அவரது நடிப்பு என்னை இன்று வரை லஞ்சம் வாங்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது" என்று ரவிராஜன் கூறியிருக்கிறார்.
|
தொடர்ந்து வாழ்வார்கள்
மரணமும் இறப்பும் சாதாரண மனிதர்களுக்குத்தான். மனோரமா போன்றவர்கள் மறைகிறார்கள்,கண்களுக்குத் தெரிவதில்லை ஆனால் தொடர்ந்து வாழ்கிறார்கள்" என்று உருக்கமாக கோவிந்தராஜன் ஜீவன் தெரிவித்திருக்கிறார்.
|
சரித்திரமாக
"மறைந்துவிட்ட பெரியாச்சி மறக்கமுடியா தமிழச்சி ஆச்சி.சாதனையும் செய்தாச்சி,சரித்திரமா போயாச்சி"என்று அன்புச்செல்வன் என்னும் ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.