Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கார் விபத்தில் உயிர்தப்பினார் நடிகை சாரதா
நடிகை ‘ஊர்வசி' சாரதா, ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பினார். கடவுள் அருளால் பிழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
‘துலாபாரம்' படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி' விருது பெற்றவர் சாரதா.
எம்.ஜி.ஆர். நடித்த, ‘நினைத்ததை முடிப்பவன்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் சாரதா, குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று விபத்துக்குள்ளாகி, தலைகுப்புற புரண்டது. பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த ‘ஊர்வசி' சாரதாவின் கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.
இந்த விபத்து பற்றி அவர் கூறுகையில், "சினிமாவில்தான் நான் கார் விபத்துக்குள்ளாவதை பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் நடந்த முதல் விபத்து இது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது என் கார் மோதியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். என்றாலும், தலைகுப்புற புரண்டு கிடந்த காரை நோக்கி நான் ஓடினேன்.
அந்த காருக்குள் ஒரு கணவனும், மனைவியும் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை வெளியே எடுத்து தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.
எல்லோரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கணவன்-மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கடவுள் அருளால்தான் நான் உயிர் பிழைத்ததாக கருதுகிறேன்," என்றார்.