Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
18 வருடங்களுக்குப்பின் மோகன்லாலுடன் இணையும் கவுதமி
சென்னை: பாபநாசம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகை கவுதமி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் 18 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் கவுதமி.
தேசிய விருதுபெற்ற தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் எலேதி இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். 9 வருடங்களுக்குப் பின்னர் பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த கவுதமி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஆர்வமாக இருக்கிறார்.
நவம்பர் 3 வது வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 21 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் பாலகிருஷ்ணா படமொன்றில் நடித்திருந்தார்.
அதற்குப்பின் தற்போது 2 வது முறையாக மீண்டும் தெலுங்கு தேசத்தில் இந்தப் படம் மூலமாக ரீ-என்ட்ரி ஆகிறார் மோகன்லால்.
படங்கள் தவிர புகழ்பெற்ற மலையாள சேனலில் ரியாலிட்டி ஷோ ஒன்றிற்கும் கவுதமி நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இயக்குநர் மணிரத்னத்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான இருவர் திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கவுதமி நடித்திருந்தார்.
18 வருடங்கள் கழித்து மோகன்லால்- கவுதமி இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.