Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சவால்களைச் சந்தித்தால்தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும் - "டார்லிங்" பிரகாஷ்
சென்னை: டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சவால்கள் சுவாரசியமானவை, சவால்களைச் சந்தித்தால் தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
2006 ம் ஆண்டில் வெயில் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் இந்த 2016 ம் ஆண்டில் தனது 10 வருட திரை வாழ்க்கையை நிறைவு செய்ய இருக்கிறார்.
ஆமாம் வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் ஜி.வி.பிரகாஷின் 10 வருட திரை வாழ்க்கை முடிந்து, 11 வது ஆண்டு திரையுலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.
இந்தப் பத்து வருடங்களில் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது முழு நடிகராகவே மாறி விட்டார்.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில், கெட்ட பயடா இந்தக் கார்த்தி, பாட்ஷா என்கிற ஆண்டனி என்று கால் டஜன் படங்களைக் கையில் வைத்திருக்கிறார், ஒரே நேரத்தில் இவ்வளவையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் இன்னும் +1 ஐக் கூட முடிக்கவில்லை ஆனால் இசையில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து இசைத்துறைக்கு வந்தேன். அதே போல நடிகனாக ஆசைப்பட்டபோது எனது அப்பா கூட வேண்டாம் என்று தான் கூறினார், ஆனால் நான் நம்பிக்கையுடன் நடிக்க வந்தேன்.
இதுபோல சவால்கள் சுவாரசியமானவை இவைகளைக் கடந்தால் தான் நாம் வாழ்க்கையில், அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.