Don't Miss!
- News ஆ.ராசா VS எல்.முருகன்.. திமுக நம்பிக்கை, பாஜக எழுச்சி! நீலகிரி தொகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?
- Sports KKR vs RR : ஐபிஎல் தொடரிலேயே 2வது மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலி செய்த சுனில் நரைன்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நயன்தாராவைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவோடு டூயட் பாடப்போகும் ஜெய்...
சென்னை: ராஜாராணி படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நடிகர் ஜெய் 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணனின் அடுத்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என தன் பன்முகத் திறமைகள் மூலம் பிரபலமானவர் ஆண்ட்ரியா. இவர் கௌதம் மேனனின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது விஸ்வரூபம் -2, உத்தமவில்லன், அரண்மனை மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர நடிகர் ஜெய் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படம் இவன் வேற மாதிரியைத் தொடர்ந்து இயக்குநர் சரவணன் இயக்கும் புதிய படமாகும்.
இது தொடர்பாக எங்கேயும், எப்போதும் பட இயக்குநர் சரவணன் கூறியதாவது :-
மாடர்ன் நாயகி...
எனது புதிய படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். நகரத்து கதைக்களத்தில் மிகவும் மாடர்னான பெண்ணாக நடிக்கிறார் ஆண்ட்ரியா.
காதல் பாதி, ஆக்ஷன் மீதி...
இப்படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். காதலும், ஆக்ஷனும் கலந்த கதைக்களம்.
தவறான தகவல்...
இப்படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்க முதலில் நான் அஞ்சலியை அணுகியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
பழைய படத்தின் தாக்கம்...
காரணம் ஏற்கனவே எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்த ஜெய்-அஞ்சலி ஜோடி பெரிதும் பேசப்பட்டது. எனவே, மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்தால் அப்படத்தின் தாக்கம் இதிலும் தெரியும்.
ஆண்ட்ரியாவுக்கான கதை...
அதனை நான் விரும்பவுமில்லை. அதோடு, இப்படத்தின் கதையை தயார் செய்யும் போதே ஆண்ட்ரியாவை மனதில் வைத்துத் தான் தயாரித்தேன்' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.