Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி 2: இது என்னய்யா ராஜமவுலிக்கு அடுத்தடுத்து சோதனை?
சென்னை: பாகுபலி 2 படத்தின ட்ரெய்லர் இணையதளத்தில் லீக்காகவே வேறு வழியில்லாமல் படக்குழு அறிவித்ததற்கு முன்பே ட்ரியெலரை வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ட்ரெய்லர்
பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் கசிந்த வேகத்தில் அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர் செய்தனர்.
படக்குழு
பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்த விஷயம் அறிந்த படக்குழுவினர் வேறு வழியில்லாமல் அதை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டனர். அனைத்து மொழி பதிப்புகளின் ட்ரெய்லர்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டது.
காட்சிகள்
முன்னதாக கிராபிக்ஸ் பணி நடந்தபோது பாகுபலி 2 படத்தின் சில காட்சிகள் கசிந்தன. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்து கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார்.
மீண்டும்
காட்சிகள் கசிந்த நிலையில் தற்போது ட்ரெய்லரும் கசிந்துள்ளது. இதுவும் படக்குழுவில் உள்ளவர்களின் வேலையா இல்லையா என்பது தெரியவில்லை.