Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கபாலி... செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ்!
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம்.
கலைப்புலி தாணு தயாரித்த தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் எம்ஜி அடிப்படையில் திரையிட மறுத்ததால், செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் தெறி வெளியானது. தேர்ந்தெடுத்த சில அரங்குகளில் மட்டும் இந்தப் படத்தை தாணு வெளியிட்டார்.
எனவே கபாலி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு ஏரியாவில் கபாலி படத்தை வெளியிடும் உரிமையை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையை எங்கள் ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைத் தந்ததற்காக ரஜினி சார் மற்றும் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை வெளியிடும் நாளுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கபாலி குறித்த மக்களின் எதிர்ப்பார்ப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.