Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத் கேட்கும் அதிக சம்பளம்... தாமதமாகிறது புதுப்பட அறிவிப்பு!
ஒரு புதுப்படத்துக்கு அஜீத் இப்போது கேட்கும் சம்பளம் எவ்வளவு? சிலர் நான்கு விரல்களைக் காட்டுகிறார்கள். சிலர் மூன்று விரல்களைக் காட்டுகிறார்கள். அதாவது நாற்பது சி.. முப்பது சி...!
ஆனால் ஒரிஜினல் கணக்கு யாருக்கும் தெரியாத விஷயம்.
அஜீத்துக்கு சம்பளம் தரும் முறை எப்படி தெரியுமா...? ஆரம்பத்தில் எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டாராம். ஆனால் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே மொத்தப் பணத்தையும் வாங்கிவிடுவாராம்.
அவருக்கு பேசப்படும் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் உள்ளிட்டவற்றை தயாரிப்பாளரே செலுத்திவிட்டு, மீதியைத் தந்துவிட வேண்டுமாம்.
இப்போது வேதாளம் படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட அஜீத், தனது அடுத்த புதுப் படத்தை அறிவிக்காமல் உள்ளார். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
நடிக்க அஜீத்தும், இயக்க விஷ்ணுவர்தனும் தயாராக இருக்க, ஏன் இன்னும் படத்தை அறிவிக்காமல் உள்ளார் அஜீத்?
சம்பளம்தானாம். அஜீத் கேட்கும் சம்பளம் மற்றும் அதை அவர் தரச் சொல்லும் விதம் போன்றவைதான் தயாரிப்பாளர்களை யோசிக்க வைக்கிறதாம். அதனால்தான் இன்னும் புதிய படத்தை அறிவிக்காமல் உள்ளார்களாம்.