Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கடைசியில் மயில்சாமி காமெடியைக் காப்பியடிச்சுட்டாரே ஷங்கர்... பேஸ்புக்கில் கிண்டல்!
சென்னை: ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ படத்தின் கதை இது தான் என இணையத்தில் ஒரு பக்கம் சீரியசான கதை ஒன்று உலாவிக் கொண்டிருக்க, மறுபுறம் அப்படத்தை கலாய்த்து வருகிறார்கள் சிலர் பேஸ்புக்கில்.
ஷங்கரின் இயக்கத்தில் படு ரகசியமாக தயாரான படம் ஐ. விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
அழகாக மாற மருந்து ஒன்றைச் சாப்பிடும் விக்ரம், அதன்பலனாக முதலில் அழகிய உருவமும், பின்னர் ஓநாய் உருவமும் பெறுவது தான் ஐ படத்தின் கதை என இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க மயில்சாமி காமெடி ஒன்றை வைத்து, இது தான் ஐ படக் கதை என கலாய்த்து வருகின்றனர் சிலர்.
சிவப்பா மாறணும்...
உன்னை நினைத்து படத்தில் கருப்பாக உள்ள மயில்சாமி, டாக்டர் சித்ரா லட்சுமணனிடம் வருவார். தான் சிவப்பாக மாற மருந்து தேவை என்று கேட்பார். தனக்குப் பார்த்துள்ள பெண் சிவப்பு என்றும், அதனால் தானும் சிவப்பாக வேண்டும் எனவும் அவர் கூறுவார்.
தங்கபஸ்பம்...
அவருக்கு தங்கபஸ்பம் லேகியம் ஒன்றைத் தருவார் சித்ரா லட்சுமணன். அதனைத் தினமும் சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் எனச் சொல்லி அனுப்புவார்.
ரொம்ப கருப்பா...
இது நடந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் டாக்டரைத் தேடி வருவார் மயில்சாமி. அப்போது மயிலிடம் உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்பார். அவரை சித்ரா லட்சுமணனுக்கு அடையாளம் தெரியாது. காரணம், முன்பு வந்ததை விட பயங்கர கருப்பாக மாறியிருப்பார் மயில்சாமி.
நல்லவேளை பல்லுல படலை...
நல்லவேளை நீ கொடுத்த மருந்தை பல்லில் படாமல் சாப்பிட்டேன். இல்லைணா, பல்லும் கருப்பாயிருக்கும்' என மயில்சாமி கூறுவதாக அமைந்திருக்கும் அந்த காமெடி.
ஐ பஞ்ச்...
இந்த காமெடி காட்சி லிங்க்கை இணைத்து, ஐ படத்தின் கதையும் ஏறக்குறைய இதுதான் என்கிறார்கள் என கலாய்க்கிறார்கள் சில பேஸ்புக் பிரியர்கள். என்ன மயில்சாமிக்கு லேகியம், விக்ரமுக்கு ஸ்டிராய்ட் என்றும் பன்ச் வைத்துள்ளனர்.
இப்டி ஆகிடுச்சே....
கடைசியில் மயில்சாமி காமெடியைக் காப்பியடிக்கிற அளவிற்கு ஷங்கர் நிலைமை வந்துவிட்டதே என ரவுண்டு கட்டி கலாய்க்கும் நிலை ஏற்பட்டு விட்டதே....!