Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாதுகாப்பு சோதனை: இசைஞானியிடம் மன்னிப்பு கேட்ட விமான நிலைய அதிகாரிகள்!
பெங்களூர்: இசைஞானி இளையராஜாவை நீண்ட நேரம் காக்க வைத்த விவகாரத்தில், பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சமீபத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள கோயில்களுக்கு இசைஞானி இளையராஜா மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
மீண்டும் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு இளையராஜா வந்தார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உடமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் கோயில் பிரசாதங்களான தேங்காய் மற்றும் விபூதியை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது கார்த்திக் ராஜா அங்கு நடந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அதிகாரிகள் இசைஞானியை சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட சக பயணிகள் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரை காக்க வைக்க வேண்டாம்.
அவரை மரியாதையுடன் நடத்துங்கள் என்று சத்தம் போட, நிலைமை மோசமாவதைக் கண்ட விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் அங்கு வந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டனர்.
அதிகாரிகள் மன்னிப்பு கேட்ட பின்னரே சக பயணிகள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். நடந்த சம்பவம் குறித்து இசைஞானி '' நான் அதனை தவறாகக் கருதவில்லை. பாதுகாவலர்கள் அவர்களது கடமையைத் தான் செய்தனர்'' என்று கூறியிருக்கிறார்.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு