Don't Miss!
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிறந்தநாளை கொண்டாடாத ஜெயா பச்சன்: காரணம் மருமகள் ஐஸ்வர்யா ராய்
மும்பை: பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடவில்லையாம்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன் கடந்த 9ம் தேதி 69 வயதடைந்தார். வழக்கமாக ஜெயா பச்சன் பிறந்தநாள் அன்று பார்ட்டி கொடுத்து அசத்துவார்கள்.
பச்சன்களின் பங்களாவான ஜல்சா விழாக்கோலமாக இருக்கும்.
கொண்டாட்டம்
இந்த ஆண்டு ஜெயா பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. மருமகள் ஐஸ்வர்யா ராய் தனது தந்தை கிருஷ்ணராஜ் ராயை இழந்து வாடும் நேரத்தில் தனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஜெயா.
பாசம்
ஜெயா பச்சனுக்கும், மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது என்று செய்திகள் வெளியானாலும் இருவரும் பாசக்காரர்களாகவே உள்ளனர்.
ஜெயா
பிறந்தநாள் அன்று ஜெயா பச்சன் டெல்லியில் இருந்துள்ளார். அமிதாப் மும்பையிலும், அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் மங்களூரிலும் இருந்துள்ளனர்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் தனது ந்தைக்கு சில சம்பிரதாயங்கள் செய்ய மங்களூர் வந்தார். அவருடன் கணவர் அபிஷேக் பச்சனும் வந்திருந்தார். அபிஷேக் தனது மாமனாருக்கு மிகவும் பிடித்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.