Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'டேக் எ செல்பி புள்ள' ராணுவ வீரர்களுடன் செல்பி கிளிக்கிய உலக அழகி
அமிர்தசரஸ்: படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொண்ட செல்பிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
ஜாஸ்பா படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரியான ஐஸ்வர்யா தற்போது சர்பிஜித் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுடன் ஐஸ்வர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யா ராய் அமிர்தசரஸ் பகுதிக்கு படப்பிடிப்புக்கு வந்த தகவலை அறிந்த, எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சந்திப்பு
வீரர்களின் கோரிக்கையை ஏற்ற ஐஸ்வர்யா படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் தங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை வைக்க, பதிலுக்கு அவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா பல்வேறு செல்பிக்களை கிளிக்கிக் கொண்டார்.
வீரர்களின் பரிசு
மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஐஸ்வர்யாவிற்கு தங்களின் அன்புப் பரிசாக ராணுவ தொப்பியை அளித்தனர். அவர்களின் பரிசினை ஏற்றுக் கொண்ட ஐஸ் அந்த தொப்பியை அணிந்தும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆரத்யா
படப்பிடிப்பிற்கு இடையில் மகள் ஆராத்யாவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கும் ஒரு விசிட் அடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. இது குறித்து அவர் "ஆராத்யாவின் வசதிகேற்பவே நான் எனது படப்பிடிப்புகளை திட்டமிடுகிறேன். அவள் என்னுடன் எப்போதும் உடனிருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
சர்பிஜித் சிங்
சர்பிஜித் படம் இந்திய விவசாயி சர்பிஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடந்த குற்றத்திற்காக சர்பிஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2013 ம் ஆண்டு சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்.
சகோதரி வேடத்தில்
இந்தப் படத்தில் சர்பிஜித் சிங்கின் சகோதரி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். வருகின்ற மே மாதம் 19 ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.