Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐஸ்வர்யா ரஜினி... ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் பெண் கலைஞர்!
சென்னை: ஐநா சபையின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, அங்கு பரத நாட்டியம் ஆடவிருக்கிறார்.
இதன் மூலம் ஐநாவில் பரத நாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா.
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில், இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியத்தை அரங்கேற்ற இருக்கிறார்.
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். பண்டிட் ரவிசங்கர், எல் சுப்பிரமணியம், ஜாகிர் ஹுசேன் ஆகியோர் ஐநாவில் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். ஆனால் முதல் முறையாக நடனம் ஆடப் போகும் இந்திய கலைஞர் ஐஸ்வர்யாதான்.
மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறவிருக்கிறது.
ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.