Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அபிநயாவுடன் ‘வாலி’ ஸ்டைலில் பேசும் அஜீத்
சென்னை: வீரம் படத்தில் தன்னுடன் நடித்து வரும் அபிநயாவுடன் வாலி திரைப்பட ஸ்டைலில் பேசிக் கொள்கிறாராம் அஜீத்.
'ஆரம்பம்' படம் விரைவில் வெளியாக் உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 'வீரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்தில் அஜீத்தின் ஜோடி தமன்னா.
இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை தேவி ஸ்ரீ பிரசாத். படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடோடிகள் அபிநயா....
நாடோடிகள் படம் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை அபிநயா. பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடையவர் அவர்.
நடிப்பால் கவரும் அபி....
தற்போது வீரம் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறாராம். படத்தில் ஒரு சில காட்சிகளில்மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறாம் அபிநயா.
அசந்து போன அஜீத்....
அபிநயாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன அஜீத், இயக்குநரிடம் அவரது காட்சிகளை அதிகப்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
வாலி பாஷை....
மேலும், வாலி படத்தில் வரும் இரு கதாபாத்திரத்தில் ஒன்றில், வாய் பேச முடியாத, காது கேளாதவராகவும் நடித்தவர் அஜீத். அந்த அனுபவத்தின் மூலம் படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ‘வாலி' பாஷையில் அபிநயாவுடன் பேசி நேரத்தைச் செலவிடுகிறாராம் அஜீத்.