Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிகினி போட்டோவில் இருப்பது நான் இல்லை, அது போலி: நடிகை அக்ஷரா
மும்பை: ஆரம்பம் படத்தில் நடித்த அக்ஷரா கவுடா இணையதளத்தில் வெளியாகியுள்ள தன்னுடைய போலி கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அஜீத், நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து அக்ஷரா கூறுகையில்,
என்னுடைய போலி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருவது வருத்தம் அளிக்கிறது. பிகினி புகைப்படங்களில் இருப்பது நான் அல்ல. மேலும் என் பெயரில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. நான் சமூக வலைதளங்களில் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சென்னையில் படப்பிடிப்பில் உள்ளதாக போலி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். நான் கடந்த 2 மாதங்களாக சென்னையில் இல்லை. இதை எல்லாம் பார்க்கையில் கோபம் வருகிறது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.