Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் கோச்சடையானுக்கே!
சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வரும் கோச்சடையானுக்காக தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளும் இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.
ரஜினி படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகே மற்ற படங்களுக்கு அரங்குகள் ஒதுக்க முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஜினி படங்கள் வெளியாகும் தேதிதான் நிஜமான பண்டிகைக் காலம். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் தொடங்கி, வாகனங்களுக்கு டோக்கன் கொடுப்பவர், திண்பண்டம் விற்பவர் என அத்தனை பேருக்கும் லாபம் தருவது ரஜினியின் படம் மட்டுமே.
முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, 'சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்' என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்!
எனவே ரஜினியின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை தருவதில் வியப்பில்லை.
இந்தப் பொங்கலுக்கு அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா போன்ற படங்கள் வருவதாக இருந்தன. கமலின் விஸ்வரூபம் 2 கூட பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள்.
ஆனால் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.
திரையரங்க உரிமையாளர்களும், தங்கள் அரங்குகளை ரஜினியின் கோச்சடையானுக்கே ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்குகள் அத்தனை திரைகளிலும் முதல் வாரம் முழுக்க கோச்சடையானை மட்டுமே திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒற்றைத் திரை அரங்குகள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை அதிகபட்ச வசூல் பார்ப்பதே ரஜினி படங்கள் ரிலீசாகும்போதுதான்.
இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைந்தது 900 அரங்குகளில் கோச்சடையான் திரையிடப்படும் எனத் தெரிகிறது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?