Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினியிடமிருந்து அழைப்பு... அதிர்ந்த மலையாளப் பட இயக்குநர்!
பொதுவாகவே தமிழ் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு ரஜினியுடன் இணையும் ஆர்வம் ஏகத்துக்கும் உண்டு. அவரிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருப்பார்கள்.
அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கி, வளரும் இயக்குநராக இருந்த ரஞ்சித், ரஜினியிடமிருந்த வந்த ஒரு அழைப்பில் இன்று முதல் நிலை இயக்குநராகிவிட்டார்.
இதேபோன்ற ஒரு அழைப்பு, இன்னொரு வளரும் இயக்குநருக்கு ரஜினியிடமிருந்து வந்தது. ஆனால் அவரோ ரஜினியைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் இன்னமும்.
இந்த இயக்குநரின் பெயர் அல்போன்ஸ் புத்திரன். கேரளாவின் சென்சேஷனல் இயக்குநர். பிரேமம் படத்தை இயக்கியவர்.
தமிழில் இவர் இயக்கிய படம்தான் நேரம்.
பிரேமம் படம் பார்த்த ரஜினிகாந்த், அல்போன்ஸ் புத்திரனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்துள்ளார். அதிர்ந்து போன அல்போன்ஸ், "ரஜினி மிகப் பெரிய நடிகர். அவருக்கு படம் பண்ணும் அளவுக்கு என் அனுபவமில்லை. அவ்வளவு பட்ஜெட்டை கையாளும் திறன் எனக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவேதான் அவரைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே மிகப் பெரிய அங்கீகாரம்தான்," என்கிறார்.