Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளேனா?: வைரமுத்து விளக்கம்
சென்னை: தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா காலமானார். அவரை அடுத்து அப்பல்லோவில் இருந்த பத்தரிகையாளர் சோ உயிர் இழந்தார்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
வைரமுத்து
வைரமுத்துவும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராமே. அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர்.
அப்பல்லோ
தன்னை பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீயாக பரவி வருவது குறித்து அறிந்த வைரமுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர்
ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.
|
நலம்
நான் முழு உடல் நலத்தோடு
இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.
பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம்.
என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.
ஊடகங்களுக்கு என் வணக்கம் என வைரமுத்து ட்வீட்டியுள்ளார்.
|
மதன் கார்க்கி
என் தந்தை பற்றி பரவும் செய்தியில் உண்மை இல்லை. நாங்கள் வருடாந்திர முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளோம் என மதன் கார்க்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.