Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சர்ச்சில் பிரார்த்தனை தான் நடந்தது... நிச்சயதார்த்தம் நடக்கவில்லை: அமலாபால் அப்பா திடுக் தகவல்
சென்னை: கடந்த 7ம் தேதி கேரள சர்ச்சில் நடந்தது பிரார்த்தனை மட்டுமே, நிச்சயதார்த்தம் அல்ல என விளக்கமளித்துள்ளார் நடிகை அமலா பாலின் தந்தை.
மைனா படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த 7ம் தேதி கேரளாவில் நடிகை அமலாபாலின் சொந்த ஊரில் நிச்சயதார்த்தமும், இன்று சென்னையில் திருமணமும் இனிதே நடந்து முடிந்துள்ளது.
அமலாபால் - விஜய் இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற புகைப்படங்கள் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்ததாக அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் கேரளாவில் உள்ள வரபுழா டயோசிசன் பாதிரியாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-
பிடித்தமான சர்ச்...
என்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே, அவர் சிறு வயது முதலே இந்த சர்ச்சுக்குத்தான் சென்று வருகிறார்.
திருமணத்திற்கு முந்தைய பிரார்த்தனை...
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த சர்ச்சில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7ம் தேதி சர்ச்சில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார் .
பிரார்த்தனை மட்டும் தான்...
கத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. சர்ச்சில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது.
தவறான தகவல்...
சர்ச்சில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் இந்த விளக்கம்...?
அமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர் அல்லாத ஒருவருக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாலேஉயே அமலாபாலின் தந்தை இவ்வாறு விளக்கமளித்திருப்பதாகக் கூறப்படுகிறாது.