Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யாரைப் பார்த்து?: ஆம்பளடா, நிரூபிச்சிட்டேன்ல- மார்தட்டிய விஷால்
சென்னை: நான் ஆம்பள என்பதை நிரூபத்துவிட்டேன் என நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்தது. பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்திலேயே நடந்தது.
கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு துவங்கியது.
தள்ளுமுள்ளு
அழைப்பிதழ் இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அழைப்பிதழ் இல்லாமல் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி
தள்ளுமுள்ளு மோதலில் முடிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 20 பேரை கைது செய்தனர். இதற்கிடையே நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
விஷால்
கூட்டத்தில் பேசிய விஷால் கூறுகையில், சங்க உறுப்பினர்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுகிறோம். யார் எத்தனை தடைகளை போட்டாலும் அதை எல்லாம் மீறி நல்லது செய்வோம். இந்த மைதானத்தில் கட்டிடம் கட்டாமல் விட மாட்டோம் என்றார்.
ஆம்பளயா?
பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து மல்லுக்கட்டும் சிலர் என்னை பார்த்து நீ எல்லாம் ஒரு ஆம்பளயா என்றார்கள். நான் ஆம்பள என்பதை தற்போது நிரூபித்துவிட்டேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றார் விஷால்.