Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேஸ்புக், ட்விட்டரில் எனக்கு அக்கவுன்டே இல்லை! - அமீரை அலற வைத்த ஒரு ட்விட்!!
நேற்று கிட்டத்தட்ட அலறிவிட்டார் இயக்குநர் அமீர். காரணம் அவர் பெயரில் வெளியான ஒரு ட்விட்.
அந்த ட்விட் விஜய்யின் தெறி படத்துக்கு எதிரானது. 'ரூ 7 கோடி கொடுத்து தெறி படத்தின் மதுரை ஏரியா வாங்கினேன். இப்போது அந்தப் படத்தால் நஷ்டம். விரைவில் போராட்டம் நடத்தப் போகிறேன்,' என்று இருந்தது அந்த ட்விட்டில்.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றை அமீர் வெளியிட்டார். அதில் எனக்கும் இந்த ட்விட்டுக்கும் சம்பந்தமில்லை. நான் பேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ இயங்கவில்லை. யாரோ திட்டமிட்டு என் பெயரைப் பயன்படுத்தி இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்ததோடு, தயாரிப்பாளர் தாணுவுக்கும் ஒரு தனி கடிதம் அனுப்பியிருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் இதைக் காட்டிய தாணு, "இது சினிமாவைக் காப்பாத்தற புள்ளை. அதனாலதான் ஒரு தவறான செய்தியைப் பாத்ததும் பதறிட்டு இப்படி விளக்கம் தருது. ஆனா தியேட்டர்காரர்கள் சங்கத்தில் உள்ள சிலர் சினிமாவை அழிக்கப் பார்க்கிறார்கள்," என்றார்.