Don't Miss!
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸு மக சரியான வாயாடி.. சொல்லிச் சொல்லி பூரிக்கும் அமிதாப் தாத்தா!
மும்பை: ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யா பேச ஆரம்பித்து விட்டால், நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாள் என்று தனது பேத்தி புராணம் பாடியுள்ளார் அமிதாப் பச்சன்.
தநது பிளாக்கில் பேத்தி ஆரத்யா குறித்து சிலாகித்து பூரித்து எழுதியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஆரத்யா நன்றாக கதை சொல்வாள் என்றும் அதைக் கேட்பதில் தனக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்றும் பச்சன் கூறுகிறார்.
3 வயதான ஆரத்யா, அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாவின் செல்ல மகள் ஆவர். தனது பேத்தி குறித்து அமிதாப் கூறுகையில், எதாவது பேசிக் கொண்டே இருக்கிறாள் ஆரத்யா. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். ரொம்ப மெச்சூர்டாக இருக்கிறாள்.
அவளுடன் இருப்பதே மிகச் சந்தோஷமான விஷயம். அதுவும் அவள் கூறும் கதைகளைக் கேட்பதில் பரம சந்தோஷம்.
விடாமல் பேசுவாள் ஆரத்யா. பேச ஆரம்பித்து விட்டால் நிறுத்த மாட்டாள். இடை இடையே கேள்விகள் வேறு சரமாரியாக வந்து விழும்.. நாம் பதில் சொல்லியாக வேண்டும். அருமையான அனுபவம் இது.
தனது பிரண்ட்ஸ் குறித்தும், தனது பொம்மைகள் குறித்தும், தனது வீடு குறித்தும், தனது வீட்டில் உள்ளோர் குறித்தும் கதை கதையாகப் பேசுவாள். இதுதான் குழந்தைத்தனத்தின் அருமையான தருணங்கள். இந்தப் பெரிய உலகுக்குள் எக்ஸ்போஸ் ஆவற்கு முன்பு இந்த அருமையான மகிழ்ச்சியான தருணத்தை குழந்தைகள் சந்திக்கிறார்கள்... என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
2007ல் திருமணமான அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடிக்கு 2011ல் ஆரத்யா பிறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.