Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2 மணி நேரம் வரிசையில் நின்று... ஜனநாயகக் கடமையை ஆற்றிய டிடி
சென்னை: 2 மணி நேரம் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றினேன் என தொகுப்பாளினி டிடி(திவ்யதர்ஷினி) தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவால் திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் வரிசையில் நின்றே ஓட்டுப் போட்டனர்.
இதுகுறித்து சின்னத்திரை தொகுப்பாளினி டிடி ''2 மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டேன். அண்ணா நகர் மக்கள் ஓட்டுப் போடுவதில் அசத்தியிருக்கிறார்கள்.
வயதானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியாததால் என்னுடைய அம்மாவும் நீண்ட நேரம் வரிசையில் நின்றார்கள்.
பிறகு எனக்குத் தகவல் தெரிந்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் வாக்களிக்க வைத்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
நேற்று திரை நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.