Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீரணக் கோளாறு... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸ், தற்போது விஜய் நடிப்பில் கத்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இன்று திடீரென முருகதாசுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அஜீரணக் கோளாறால் அவதிப்பட்ட முருகதாஸ்அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கூறுகையில், அஜீரணக் கோளாறு காரணமாகவே முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், முருகதாஸின் உடல்நிலை அபாய நிலையில் இல்லை என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே கத்திப் படம் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், முருகதாசின் இந்த திடீர் உடல்நலக் கோளாறு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!