Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்
கவுதம் மேனனும் ஏ ஆர் ரஹ்மானும் முதலில் இணைந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பாடல்களும் படமும் செம ஹிட்.
அடுத்து அதே படத்தை இந்தியில் ரீமேக்கினார்கள். ஆனால் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை.
அதன் பிறகு ரஹ்மானும் கவுதம் மேனனும் மீண்டும் சேரவே இல்லை.
கவுதம் மேனன் இளையராஜாவுடன் இணைந்து நீதானே என் பொன் வசந்தம் படம் செய்தார். அடுத்து என்னை அறிந்தால் படத்துக்காக மீண்டும் தன் பழைய பார்ட்னர் ஹாரிஸ் ஜெயராஜிடம் போனார்.
இப்போது மீண்டும் ஏ ஆர் ரஹ்மானை நாடியுள்ளார். இது சிம்பு - பல்லவி சுபாஷ் நடிக்கும் புதிய படத்துக்காக. இந்தப் படத்தை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார் கவுதம். ஆனால் என்னை அறிந்தால் இயக்க வேண்டி வந்ததால், அப்படியே நிறுத்திவிட்டார். அந்தப் படத்துக்காக போடப்பட்ட டைட்டிலில் இசை ஏ ஆர் ரஹ்மான் என்றுதான் வருகிறது.
நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரஹ்மான், இணையதளத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தினார்.
என்னை அறிந்தால் வெளியானதும், இந்த சிம்பு படம் தொடங்கிவிடும். இன்னும் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயாவாக இந்தப் படம் அமையட்டும்.