Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஸ்கர் விருதை தவறவிட்டார் ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான்
நியூயார்க்: ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இல்லை. இதனால் மீண்டும் ஆஸ்கர் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக ஒன்று அல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருந்துக்கு பரிந்துரை செய்ய தகுதியான படங்கள் பட்டியலில் அவர் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம் ஆகிய ஹாலிவுட் படங்களும், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படமும் இடம்பெற்றது.
இந்நிலையில் 87வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான பரிந்துரை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இல்லை. இதனால் அவர் ஆஸ்கர் விருதை தவறவிட்டுள்ளார்.
இது குறித்து ரஹ்மான் கூறுகையில்,
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார் என்று நினைக்கிறேன். இது என் நீண்ட பயணத்தில் ஒரு நிறுத்தம் அவ்வளவு தான் என்றார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற உள்ளது.