Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நள்ளிரவு பார்ட்டியில் வாலிபரை காயப்படுத்திய பிரபல நடிகர் மீது புகார்
டெல்லி: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கேமராவை வீசியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள இரவு நேர கிளப்பில் நேற்று இரவு டிஜேவாக செயல்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் அர்ஜுனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதை பார்த்த அர்ஜுன் கோபம் அடைந்துள்ளார்.
கேமரா
அந்த புகைப்படக் கலைஞர் வைத்திருந்த கேமராவை பறித்து கூட்டத்தை நோக்கி வீசியுள்ளார் அர்ஜுன். இதில் கூட்டத்தில் இருந்த ஷோபித் என்பவரின் தலையில் கேமரா பட்டு அவர் காயம் அடைந்தார்.
|
அர்ஜுன்
நான் சனிக்கிழமை இரவு பார்ட்டிக்காக ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் அர்ஜுன் ராம்பல் டிஜேவாக இருந்தார். அவர் கூட்டத்தை நோக்கி கேமராவை வீசியதில் எனக்கு காயம் ஏற்பட்டது என்றார் ஷோபித்.
பவுன்சர்கள்
இந்த சம்பவம் இரவு 3.30 மணிக்கு நடந்தது. இது பற்றி அவரிடம் கேட்க சென்றால் அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தூக்கி வெளியே வீசிவிட்டார்கள் என ஷோபித் தெரிவித்தார்.
புகார்
போலீசில் அர்ஜுன் ராம்பல் மீது புகார் அளித்துள்ளேன். ஆனால் போலீசார் என் புகாரை கண்டுகொள்ளவில்லை, ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று ஷோபித் கூறினார்.