twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் இந்தியா வருகிறார் அர்னால்ட்!

    By Shankar
    |

    ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர் மீண்டும் இந்தியா வருகிறார்.

    டெல்லியில் நடைபெறும் எரிசக்தி ஆய்வு மைய மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

    வரும் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இந்த மாநாடு 7-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த பசுமை மாநாடு நடக்கிறது.

    Arnold to be star attraction at Delhi green summit

    இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    அர்னால்டு கலந்து கொள்வதன் மூலம் இந்த மாநாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு முன் 2007-ம் ஆண்டு 2012-ம் ஆண்டு நடந்த பசுமை மாநாட்டில் அர்னால்ட் கலந்து கொண்டார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ பட இசை வெளியீட்டில் பங்கேற்றார் அர்னால்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hollywood actor, activist and former California governor Arnold Schwarzenegger will attend the annual 'Delhi Sustainable Development Summit' (DSDS) which is organized in the Capital from February 5 to 7 to brainstorm on ways and means to tackle climate change and reduce carbon footprints.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X