Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு கைது வாரண்ட்!
ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்மபத்தினி, இது தாண்டா போலீஸ், பாடும் வானம்பாடி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜீவிதா. தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்தார். தனது கணவருடன் பல படங்களை சொந்தமாக தயாரித்து வந்தார்.
நடிகை ஜீவிதா ஆந்திர மாநிலம் நந்தியாலாவைச் சேர்ந்த பி.வி.ஜெகதீஷ்குமார் என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். கடனை அடைக்க அவருக்கு 2 ‘செக்' கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அந்த செக் திரும்பி விட்டது.
இதையடுத்து ஜெகதீஷ்குமார் நந்தியாலா முதல்நிலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜீவிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
2015-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜீவிதாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் ஜீவிதாவைக் கைது செய்ய வாரண்டு பிறப்பித்து நீதிபதி ராமமோகன் உத்தரவிட்டார்.