Don't Miss!
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாம கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- News சினிமா தியேட்டர் மூடப்படுகிறதா? தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்தாகிறதா? சட்டென வெளிவந்த அறிவிப்பு
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஏன் பார்க்கலைனு அரவிந்த்சாமி என் மீது கோபமாக உள்ளார்: மணிரத்னம்
சென்னை: நடிகர் அரவிந்த்சாமி தன் மீது கோபமாக இருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் நடிகர் ஆனவர் அரவிந்த்சாமி. மணிரத்னத்தின் ரோஜா படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
சில காலம் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த அரவிந்த் சாமி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
தனி ஒருவன்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக அசத்தல் வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
மணிரத்னம்
மணியின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் அரவிந்த்சாமி. அப்படி இருக்கும்போது அவர் நடித்த தனி ஒருவன் படத்தை இன்னும் மணி பார்க்கவில்லையாம்.
விரைவில்
தனி ஒருவன் ரிலீஸான போது அதை தியேட்டரில் பார்க்க முடியவில்லை. இதனால் அரவிந்த் சாமி இன்னும் என் மீது கோபமாக உள்ளார். சரியான நேரம் வரும்போது விரைவில் டிவிடியில் பார்க்க வேண்டும் என்கிறார் மணிரத்னம்.
தளபதி
கார்த்தி, அதிதி ராவ் ஹைதரியை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து தளபதி போன்று கேங்ஸ்டர் படத்தை இயக்குவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் மணி.