Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வெள்ளம் பாதித்த 2 லட்சம் குடும்பங்களுக்கு அரவிந்த்சாமி மருத்துவ உதவி!
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்குகிறார் நடிகர் அரவிந்த்சாமி.
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் படம் மூலம் மீண்டும் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளார் அரவிந்த்சாமி.
சமீபத்திய பெரும் வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கித் தவித்தபோது, முதல் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு இலவச உணவு தந்தார் அரவிந்த்சாமி.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்டமாக மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.
மேலும் குடிநீர் பாட்டில்கள், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த எலக்ட்ரால் பவுடர், குளிர்பானங்கள், கெல்லாக்ஸ் போன்றவை அடங்கிய பாக்கெட்டுகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து அரவிந்தசாமி கூறுகையில், "இது எங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கை. 2 லட்சம் குடும்பங்களுக்கு இந்த முறை உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டன. இன்று அவற்றை பேக் செய்து நாளை வழங்க ஆரம்பித்துவிடுவோம்.
இந்தப் பணியில் எங்களுக்கு பலர் உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. அடுத்த கட்ட உதவி குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்போகிறோம்," என்றார்.