Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரிசார்ட்டில் என்ன வேலைனு எம்.எல்.ஏ.க்களை புடுச்சு கேளுங்க மக்களே: அரவிந்த்சாமி
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் தாமாக ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவாத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை அவர்களாகவே இங்கு வந்து தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
எம்.எல்.ஏ.க்கள்
எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாக தாமாகவே ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும்.
|
வேலை
எம்.எல்.ஏ.க்கள் வேலைக்கு திரும்ப வேண்டும். தொகுதி மக்களுடன் கலந்து பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
|
ரிசார்ட்
கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், தாமாகவா வந்தீர்கள் என்று ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்பதில் பலன் இல்லை என அரவிந்த் சாமி ட்வீட்டியுள்ளார்.
அதிரடி
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து அரவிந்த் சாமி அவ்வப்போது ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே தற்போதைய நிலைக்கு சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.