Don't Miss!
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
லைகா பெயரை பத்திரிகை விளம்பரங்களில் தூக்கி விடுகிறோம்: போலீஸ் கமிஷனரிடம் ஒப்புதல்
'கத்தி' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பத்திரிகை விளம்பரங்களில் லைகா பெயரை தூக்கிவிடுகிறோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் லைகா நிறுவனத்தின் பெயரோடு வெளியிடுவதை கடுமையாக எதிர்த்தனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார், இலங்கை ஏர்லைன்சுடன் கூட்டாளியாக உள்ளார் என்று குற்றம்சாட்டின.
எதிர்ப்பை மீறி ‘கத்தி' படத்தை நாளை மறுநாள் (22-ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில்தான் சத்யம், உட்லண்ட்ஸ் அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இன்று வெளியான கத்தி விளம்பரங்களில் லைகா நிறுவனப் பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சமாதானமடையாத போராட்டக்காரர்கள், தாங்கள் கத்தி தயாரிப்பாளர்களுடன் சமரசமாகவில்லை என்று அறிவித்துள்ளனர்.
எனவே இந்தப் படத்துக்கான புக்கிங்கை இந்த நிமிடம் வரை நிறுத்தி வைத்துள்ளன தமிழக திரையரங்குகள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எந்தப் பிரச்சினையுமின்றி கத்தி வெளியாகிறது.
இதற்கிடையில் ‘கத்தி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி சென்னை கமிஷனரிடம் ‘கத்தி' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார். இது 20ம்தேதியிட்ட மனுவாகும்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, படத்தின் டிஜிட்டல் பிரிண்ட்டில் லைகா பெயரை நீக்க சம்மதிக்கிறோம். 21ம்தேதி முதல், தினத்தந்தி, தினகரன் பத்திரிகைகளிலும் கத்தி பட விளம்பரத்திலுள்ள லைகா பெயர் நீக்கப்படும். இந்து பத்திரிகையில் மட்டும் நேரக்குறைவு காரணமாக லைகா பெயரை நீக்க முடியவில்லை. அதையும் தீபாவளி நாள் முதல் நீக்கிவிடுகிறோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.