Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகுபலி 2ம் பாகத்தில் எமோஷன் அதிகமாக இருக்கும்.. கதாப்பாத்திர தன்மை மாறும்: ராஜமவுலி
பூசன்: "பாகுபலியின் 2வது பாகத்தில், முழுக்க காட்சிகளையும், விஷுவல் எஃபெக்டுகளையும் மட்டுமே நாங்கள் நம்பியிருக்க போவதில்லை. 2ம் பாகத்தில், பாகுபலியைவிடவும், எமோஷனல் அதிகம் இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்கள் மாறப்போவதில்லை. ஆனால் அவர்களின் கதாப்பாத்திர தன்மை வித்தியாசமாக இருக்கும்" என்று திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்தார்.
தென் கொரியாவின் பூசனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலியின், 'பாகுபலி தி பிகினிங்' திரையிடப்பட்டது.
தென்கொரியாவில் வரவேற்பு
தென் கொரிய ரசிகர்களும், படத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர். ராஜமவுலியிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் கூட்டம் அலைமோதியது.
விஷுவலை நம்புவதில்லை
அங்கு நிருபர்களிடம் பேசிய ராஜமவுலி கூறியது: பாகுபலியின் போர்க்கள காட்சிகளுக்காகவே, ரசிகர்கள் திரும்ப திரும்ப படம் பார்த்தனர் என்பதை படக்குழு அறிந்துள்ளது. ஆனால், பாகுபலியின் 2வது பாகத்தில், முழுக்க காட்சிகளையும், விஷுவல் எஃபெக்டுகளையும் மட்டுமே நாங்கள் நம்பியிருக்க போவதில்லை.
உணர்ச்சி பொங்கும்
2ம் பாகத்தில், பாகுபலியைவிடவும், எமோஷனல் அதிகம் இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்கள் மாறப்போவதில்லை. ஆனால் அவர்களின் கதாப்பாத்திர தன்மை வித்தியாசமாக இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்களா இவை என வியக்கும் வகையில் அவற்றின், செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நவம்பரில் சூட்டிங்
பாகுபலி 2வது பாகத்தின் 40 சதவீத சூட்டிங் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்ட ஷூட்டிங் நவம்பரில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம், கோடை விடுமுறையின்போது, படம் ரிலீசாக உள்ளது. படத்திற்கு 40 மில்லியன் டாலர் என பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் பார்ட் பெற்ற வெற்றியை தொடர்ந்து பட்ஜெட்டை 50 மில்லியன் டாலராக அதிகரிக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.