Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ. 45 கோடிக்கு விலை போன 'பாகுபலி 2' படத்தின் தமிழக விநியோக உரிமை.. வாங்கியது யார்?
சென்னை: பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 45 கோடிக்கு போயுள்ளதாம்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த படம்.
பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்காரர்களையே மிரள வைத்த படம் பாகுபலி. இந்நிலையில் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது.
இந்நிலையில் பாகுபலி 2வின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.45 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வாங்கியது யார் என்ற விபரத்தை தெரிவிக்க படக்குழுவினர் மறுத்துவிட்டனர்.
படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சண்டை காட்சியை வைத்துள்ளாராம் ராஜமவுலி. அந்த சண்டை காட்சி மட்டுமே அரை மணிநேரம் ஓடுமாம்.