Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
"பாகுபலி தப்பு.. பாகுபலி தப்பு"... இப்படிக்கு... அதன் ஒளிப்பதிவாளர்!
சென்னை: பாகுபலி முதல் பாகத்தில் பல காட்சிகள் செயற்கையாக, பல்வேறு தவறுகளுடன் உள்ளதாகவும், அவை நிச்சயம் இரண்டாம் பாகத்தில் சரி செய்யப்படும் என்றும் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. வசூலில் பெரும் சாதனை புரிந்த இப்படத்தின் இரண்டாம் அடுத்தாண்டு ரிலீசாக உள்ளது.
முதல் பாகத்திலேயே பிரமாண்டமான காட்சிகளால் மிரட்டியிருந்தார்கள். எனவே, இரண்டாம் பாகத்தை மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
செயற்கையான காட்சிகள்...
இந்நிலையில், பாகுபலி முதல் பாகத்தில் பல காட்சிகள் செயற்கையாக, அவை கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என அப்பட்டமாகத் தெரிந்ததாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்தியில்லை...
மேலும், ஒரு ஒளிப்பதிவாளராக தனக்கு இப்படம் திருப்திகரமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். காரணம் பல காட்சிகளில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறதாம்.
சரி செய்யப்படும்...
ஆனால், இந்தத் தவறுகளை நிச்சயமாக பாகுபலி இரண்டாம் பாகத்தில் சரி செய்ய முயற்சிப்போம் என்றும் செந்தில் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈகா..
ஏற்கனவே, மகதீரா, அருந்ததி, ஈகா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் தான் செந்தில். பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஷாரூக், கஜோல் சேர்ந்து நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் தில்வாலே படத்திலும் பாடல் ஒன்றை இவர் படமாக்கியுள்ளார்.
சவால்...
அதோடு, ‘பாகுபலியின் முதல் பாகம் இந்தளவிற்கு வெற்றி பெறும் என நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இதனால், இரண்டாம் பாகத்தை மேலும் சிறப்பாகத் தர வேண்டிய சவால் உள்ளது.
முக்கிய நிகழ்வுகள்...
காரணம், முதல் பாகம் வெறும் அறிமுகம் மட்டுமே. இரண்டாம் பாகத்தில் தான் கதையின் முக்கிய நிகழ்வுகள் உள்ளன' என செந்தில் தெரிவித்துள்ளார்.