Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது.
ஒரு வருடத்துக்கும் அதிகமாக நடந்த படப்பிடிப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவடைந்ததில் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நேரடிப் படமாக தயாராகிவருகிறது 'பாகுபலி-2'. ராஜமௌலி இயக்கத்தில் தயாரான 'பாகுபலி' முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்போது அதன் இரண்டாம் பாகம் பாகுபலி - தி கன்க்ளூஷன் என்ற பெயரில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 2-ம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதம் உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஒரு வருட காலமாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பு நேற்று (6-ந் தேதி) பிரபாஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் நிறைவு பெற்றது.
'பாகுபலி' இரண்டு பாகங்களையும் சேர்ந்தால் மொத்தம் 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இந்திய திரையுலகில் வேறு எந்த படத்துக்கும் இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடந்தது இல்லை.
'பாகுபலி' படத்துக்காக மட்டும், பிரபாஸ் வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் 3.5 ஆண்டுகள் பாகுபலியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்றார் ராஜமௌலி.
படப்பிடிப்பு நிறைவு நாள் என்பதைக் குறிப்பிடும் வகையில் நேற்று ராஜமௌலியும் பிரபாஸும் பூசணிக் காய்களுடன் போஸ் கொடுத்தனர்.