Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
முட்டாப் பய, காசெல்லாம் போய் பழையபடி இட்லி கடை வக்கப் போனியா: கஞ்சா கருப்பை கடிந்த பாலா
சென்னை: அடி முட்டாள் பய அவன் போய் படம் தயாரிக்கணும்னு. உனக்கு எல்லாம் என்ன தெரியும்னு படம் தயாரிச்ச. இருந்த காசெல்லாம் விட்டயா? பழையபடி இட்லிக் கடை வக்கப் போனியா? என இயக்குனர் பாலா கஞ்சா கருப்பை கடிந்து கொண்டார்.
விக்ராந்தை வைத்து சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் படம் தொண்டன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சமுத்திரக்கனி
குடும்பப் பாங்கான படம் எடுப்பவன் சமுத்திரக்கனி. இவனால் எனக்கு இம்சை என்னவென்றால் தமிழ்நாட்டில் எந்த காலேஜ் அல்லது ஸ்கூலில் ஃபங்க்ஷன் நடந்தாலும் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு அவரை தெரியும்ல அவரை அனுப்பி வைங்க என்கிறார்கள்.
தரமான படம்
அவன் ஷூட்டிங்கில் இருப்பானா என்னன்னு தெரியலை வேறு யாராவது நடிகை, நடிகரை அனுப்பவா என்று கேட்டால், வேண்டாம் என்கிறார்கள். ஏன் சமுத்திரக்கனி தான் வேண்டும் என்று கேட்டால் அவர் தான் குழந்தைகளை வைத்து தரமாக படம் எடுக்கிறாரு என்கிறார்கள்.
கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு தேவையில்லாமல் அறிவுக்கு மீறின செயல், அடி முட்டாள் பய அவன் போய் படம் தயாரிக்கணும்னு. உனக்கு எல்லாம் என்ன தெரியும்னு படம் தயாரிச்ச.
இட்லிக் கடை
இருந்த காசெல்லாம் விட்டயா? பழையபடி இட்லிக் கடை வக்கப் போனியா? இட்லிக் கடைக்கு போன உன்ன கூடிட்டு வந்து வாழ்க்கை கொடுக்கிறான். இதையாவது வச்சு பொழைச்சுக்கோ. அது தான் உனக்கு சொல்ல முடியும் என்றார் பாலா.